![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGb9mVabAposdsKXreQBjisj03697cH1zkO8gf5V26OYfLE9TxilbjXcYbkp60PuOflkBHVSm1F0B5CK9CSLGREY1hodBjeHnbLlkl3sb7MfboUvQTMF3JwtMPXSTjoZpxPMN9yg_H4B7K/s320/Samookappani.jpg)
அறிமுகப்படுத்திய அதே நண்பர் தாம் பாவலரேறுவின் "வாழ்வியல் முப்பது" என்ற சிறு கவிதைத் தொகுப்பைப் பரிசளித்தார். பாவலரேறு தமிழையும் கடந்து மானுடத்தை நேசித்ததற்கு அது ஒரு அடையாளம்.
வருடங்கள் கடந்தன். பாவலரேறு பல காரணங்களால் உளவுத் துறையின் கண்காணிப்பிற்கு உட்படுதப்ப்பட்டார். அறிமுகப்படுத்திய அதே நண்பர், ஒரு நாள் என்னைத் தேடி வந்தார். அவருக்கு நெருக்கமான உளவுத்துறை நண்பர், அவரிடம் என்னைப் பற்றியும் விசாரித்திருக்கின்றார்.
முன்பின் தெரியாத யாராவது, தமிழ் தீவீரவாதம், இலங்கை பிரச்சினை பற்றி வாயைக்கிளறினால் கவனமாகப் பேசும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு முன்னரே எனக்கு அறிமுகமில்லாத ஒருவர், நான் சந்தேகப்படாத அளவு இதைப் பற்றி பேசிவிட்டுச் சென்றுவிட்டார். இந்த மாதிரி மொக்கைகளைஎல்லாம் பட்டியலில் சேர்த்து ஏன் உயிரை வாங்குகிறீர்கள் என்று அவர் அலுவலகத்தில் கோபித்து இருப்பார்.
மதுரையில் அப்போது பிரபலமாயிருந்த இன்னொரு தமிழ் அறிஞ்ரும் கூட என்னை எச்சரிக்கை செய்தார். பாவலரேருவுக்கு பல பிரச்சனைகள். தென்மொழி வெளியீடு சிக்கலுக்கு உள்ளானது. தொடர்புகள் விட்டுப்போயின. நான் ஒரு சராசரி வாசகன் தானே!
92 ல் கல்லூரி சார்பாக ஒரு இதழ் தயாரிக்கும் பணி எனக்கு கொடுக்கப்பட, இட நிரப்பலுக்க்காக (gap filling) என் மனதில் பட்டது பாவலறேருவின் வாழ்வியல் முப்பது. எங்கள் கல்லூரியில் பாவலறேரு பற்றி யாருக்கும் தெரியாது. பாவலறேருவின் கவிதைகளைப பிரசுரித்து அவர் பெயரைப் போட்டிருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காதுதான்.அட்சேபிதிருக்கமாட்டார்கள் தாம். இருப்பினும், பிரச்சனை தவிர்க்க பெயரைப் போடாமலே பாவலறேருவின் கவிதைகளைப் போட்டுவிட்டேன்.அது தவறுதான். ஆனால் மரியாதையை மனதில் கொண்டு செய்ததால் மனசாட்சி உறுத்தவில்லை.
இடையில் நான் தேடியும் வாழ்வியல் முப்பதோ, சமூகப் பணி இதழோ எனக்குக் கிடைக்கவில்லை. பாவலரேறுவின் கவிதைகளை சிறு சிறு “பேனர்களாக்கி” கல்லூரியில் வைக்கும் எனது ஆசை நிராசையாகிப் போனது.
சமீபத்தில் கல்லூரி பணியாளர்கள் பழைய ஆவணங்களை கிளறிக் கொண்டிருந்தபோது, சமூகப்பணி இதழ் கிடைக்க நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பாவலரேறுவின் சில கவிதைகளை பலர் பார்வைக்கு வைக்கலாமே என்ற மகிழ்ச்சி. “யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்” (தென் மொழி பதிப்ப்பகத்தார் இந்த ஆர்வத்தின் பின்னணியில் இருக்கும் நல்லெண்ணத்தைப் புரிந்துகொண்டு மன்னிப்பார்களாக)
பாவலரேறுவின் கவிதைகளில் சில
ஊக்கமும் முயற்சியும் | ஒழுக்கமே உன்றனை | உண்மை வலியது! |
உள்ளம் விழைவதை | உயர்வாய் நினைப்பவை | உயிரை மலர்த்து |
மாந்த ஒளி நீ | உன்றன் விழிகளை | உயிரை மலர்த்து |
1 comment:
u'r superb-BEE extract best honey from tamil poet
Post a Comment