11/19/09

How to dream? எப்படி கனவு காண வேண்டும்?

சௌமியாவின் கனவு

ஒரு அதிகாலை நேரம். வெளியூர் பயணத்தையொட்டி சீக்கிரம் தயாராக எழுந்து விட்டிருந்தேன். ஒரு SMS வந்தது. பார்த்தால் சௌமியா என்ற முன்னாள் மாணவி அனுப்பி இருந்தார். அவர் SMS எல்லாம் அனுப்ப மாட்டார். எதுவா இருந்தாலும் மொபைலில் நேரடியாகப் பேசுவார். SMS அனுப்பாதவர்களிடமிருந்து, அதுவும் அதிகாலையில் வருகிறது என்றால் பதற்றம்தான். அந்த SMS இன் உள்ளடக்கம் இதுதான்.

Good morning sir. I had a dream yesterday night. It was about an interaction in a forum of learned people like you.It was a pleasure that I was given a chair in that. The proceeding was about a silent, revolutionary community development movement.I couldn't just exactly recollect what I dreamt of. I was extremely happy the way you and the other learned honored me. Thank you sir. ஒரு வித்தியாசமான கனவு.

ஆசிரியர் - மாணவர் என்ற உறவையும் மீறி ஏற்படும் பரஸ்பர அபிமானத்தால், எதையும் உரிமையுடன் பேசும் பல மாணவர்களில் அவரும் ஒருவர். ஆகையால் "yesterday I had a dream" என்ற வரிகளைப் பார்த்தவுடன் கொஞ்சம் பயந்தேன். சினிமாவில் வடிவேலு மொத்து வாங்கிய மாதிரி நாலைந்து பேர் உங்களை மொத்த, தற்செயலாக அங்கு வந்த நான் அதை தடுத்து நிறுத்தினேன் என்று எழுதியிருப்பாரோ என்று தொடர்ந்து பயந்து கொண்டே படிக்க அப்படி ஏதுமில்லை. "It was a forum of learned people like you" என்ற வரியைப் படித்தவுடன், "வாத்தியார்களை நாசுக்காக கிண்டலடிப்பதில் இவர்கள் கில்லாடிகள் தாம். ரூம் போட்டு யோசிப்பார்களோ" என்று எண்ணிக்கொண்டே தொடர " it was a forum of of silent, revolutionary community development movement" என்ற வார்த்தைகள் எனக்கு ஆறுதலும் பெருமையும் அளித்தன.

MSW இல் Medical & Psychiatric Social Work Specialization எடுத்து Summer Placement க்கு சென்னையில் ஒரு development organization னுக்கு போக அவரைப் பிடித்தது வினை. Development Field ன் பால் அவருக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. Community Development Specialization எடுக்கத் தவறியதற்காக ஆதங்கப்படுவார். பின் HR Field க்கு பணிக்குச் சென்றார். இருந்தாலும் அந்த development thinking இருக்கும். எதாவது ஒரு நல்ல Corporate Social Responsibility பொறுப்புக்கு போக வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. அவர் கண்ட கனவு கூட அதன் வெளிப்பாடோ என்னவோ?.

அந்த SMS க்கு நான் பதில் சொல்லவில்லை."என்னடா சார்! நம்ம SMS க்கு பதிலே சொல்லவில்லை" என்று சௌமியா வருதப்பட்டிருக்கலாம்.ஆனால் அவருடைய கனவு என்னை மறு கனவு காணத் தூண்டியது. வெளியூரில் இருந்ததால் எழுதி போஸ்ட் செய்யத் தாமதமாகிவிட்டது. இதோ அந்த மறு கனவு.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம். நான் சவுத் ஆப்ரிக்காவிலுள்ள ஒரு நகருக்கு விமானம் மாற வேண்டும். எதிரே குழந்தையை perambulator ரில் வைத்து தள்ளிக்கொண்டு வரும் சௌமியா. இருவருக்கும் மகிழ்ச்சி. ஏதோதோ பேசுகிறோம். நினைவில் இல்லை. "என்னம்மா குழந்தை பிறந்ததைக் கூட சொல்லவில்லை என்று கடிந்து கொள்கிறேன்..அதற்கு சௌமியா சமாதானம் சொல்வது மாதிரி, "என்ன சார் செய்வது. Conceive ஆனா பத்து நாளில், சிலி நாட்டில் நடந்த civil conflicts ஐ handle பண்ணுகிற UN Negotiation Team உடன் போக வேண்டிய கட்டாயம். சந்தோசமாகத்தான் சென்றேன். அங்கு Team க்கு பிரச்சினை இல்லையென்றாலும், நாட்டை விட்டு வெளி ஏற முடியவில்லை. பாப்பா கூட அங்கேதான் பிறந்தது. அவர்தான் special permission எல்லாம் வாங்கி குழந்தையைப் பார்த்து விட்டுச் சென்றார். வருடம் முடிவதற்குள் குழந்தைக்கு மொட்டைஅடிக்க வேண்டுமல்லவா, அதற்காக மதுரைக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.

Perambulator ல் குழந்தை அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. பேபி க்கும் jet log அவஸ்தை உண்டல்லவா? இதற்குள் checkin னுக்காக அழைப்பு. எனக்கோ சங்கடம். குழந்தையை எப்படி வெறுமனே ஆசிர்வதிப்பது? .

என் கழுத்திலிருந்த செயினைக் கழற்றி, குனிந்து குழந்தையின் கழுத்தில் போட்டுவிட்டு நிமிர முயற்சிக்கின்றேன். நிமிர முடியவில்லை.முதுகு பிடித்துக்கொண்டது. வயசாகிவிட்டதல்லவா.
முதுகு வலியால் கனவு கலைந்தது.

கனவென்றால் இப்படி கனவு காணவேண்டும்.

கனவுகளுக்கெல்லாம் வரியா போடப் போகிறார்கள்? திரு. சிதம்பரம் அவர்கள் நிதி அமைச்சராக இருந்தால் கூட, தமிழ் தெரிந்தவரானதால், கனவைப் புரிந்து கொண்டு ஏதாவது வரியைக் கிரியைப் போட்டுத் தொலைத்து விடலாம். பிரணாப் முகர்ஜிக்கு தமிழ் தெரியாதாகையால் தைரியமாகக் கனவு காணலாம்.

கனவில் என்னைக் கவுரவப் படுத்தியதற்கு நன்றி சௌமியா. மறு கனவின் மூலமாக உங்களையும், மற்ற மாணவர்களையும் கவுரவப் படுத்திவிட்டேனா?

1 comment:

Unknown said...

interesting and nice a teacher is always a teacher :-)